உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

dmk udumalai skm

உதயநிதி பிறந்தநாள் – நலத்திட்டம் வழங்கல்

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னணியில் திகழ்ந்து கொண்டு, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் சமூக அமைதிக்குமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும், தமிழகத்தின் துணை முதலமைச்சரும், கழக இளைஞர்களின் செயலாளரும், அத்துடன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தவப்புதல்வருமான பெருமதிப்புமிக்க  திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நாற்பத்தி எட்டாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு நன்மைப்பணிகள், மக்கள் நலத்திட்டம்‌ சார்ந்த நிகழ்வுகள், சமூக சேவை முயற்சிகள், இளைஞர் சந்திப்புகள், புதிய பல முன்னெடுப்புகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.

அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் இளைஞர்களுக்கு இடையே சேவை மனப்பான்மையை விதைக்கும் நாளாகவே கருதப்படுவதால், இந்த ஆண்டும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களின் தேவைகளை நேரடியாகப் பூர்த்தி செய்யும் பலதரப்பட்ட திட்டங்கள் திரளாக முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலும், நிகழ்வுகள் ஒவ்வொன்றாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு, கழகத்தின் சமூகப் பொறுப்பானது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அந்த வகையில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரமும் உடுமலைத் தொகுதியும் கொண்டுள்ள மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம், சோழமாதேவி பகுதி, உடுமலை மத்திய ஒன்றியத்தைச் சேர்ந்த போடிபட்டி, உடுமலை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தேவனூர்புதூர், கரட்டுமடம் மற்றும் ஜிலேபி நாயக்கன் பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நலன் கருதி ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு சிறப்பு நலத்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

வீட்டின் சுத்தமே ஊரின் சுத்தம்; ஊரின் சுத்தமே நாட்டின் சுத்தம்; அது தேவை நித்தம்!” என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தூய்மைக் காவலர்களின் தியாகத்தையும், தினசரி செய்யும் பொறுப்பையும்,  சமூகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்து, அவர்களைப் பாராட்டி மகிழும் வகையில் சீருடைகள், உணவு ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர். 

இந்த நிகழ்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், அந்த பணியாளர்களின் முகங்களில் நன்றி உணர்வையும் மலரச் செய்தது.

ஒரு நகரத்தின் சுகாதாரத்திற்கு பெரும்பங்காற்றுபவர்கள் நமது தூய்மைக் காவலர்களே! இவ்வாறானோர் மீது மரியாதையும் மனப்பூர்வமான நன்றியும் செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்தே இத்தகைய நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஊக்கு விற்பவரையும் ஊக்குவித்து வந்தால் அவர் ஒருநாள் தேக்கு விற்பவராக மாறலாம்” 

என்ற வாசகத்திற்கிணங்க உழைப்பாளிக்கு ஊதியம் போல, சேவை செய்பவனுக்கு அங்கீகாரம் என்பது மிகவும் அவசியம்.  துப்புரவு என்பது ஒரு வேலை என்பதைத் தாண்டி அது ஒரு சேவையாகவும் தான் கருதப்படுகிறது. எனவே அவர்களின் கடமையைச் செய்தாலும் கூட அந்த மனப்பாங்கினை ஊக்குவிக்கும் விதமாகத் தான் இந்த நிகழ்வு நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வில், மிகப்பெரும் பங்காக இருந்து வழிகாட்டியாக செயல்பட்டவர், நமது மாண்புமிகு கழகத் துணைப் பொதுச் செயலாளர், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்.

அத்துடன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு, இத்தகைய நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதையும், கழகத்தின் இளைஞர்கள் மேலும் அதீத உற்சாகத்துடன் சமூக சேவையில் ஒன்று திரள்வார்கள் எனும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், உடுமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் SKM தங்கராஜ் (அ) SK மெய்ஞானமூர்த்தி ஆகிய நான், இந்நிகழ்வின் ஏற்பாடுகளில் தொடக்கம் முதல் நிறைவு வரை செவ்வனே பொறுப்பேற்று செயல்பட்டு,முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்வுகள் நேர்மையாக நடைபெற நுட்பமான கவனிப்பைச் செய்திருந்தேன். என்னுடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றினர்.

skm udumalai dmk

ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த குழுக்கள் தங்களின் பகுதிகளில் தூய்மைக் காவலர்களை ஒருங்கிணைத்து, பட்டியலிட்டு, அவர்களுக்கு சீருடை, உணவு வழங்கும் பணிகளை திட்டமிட்ட முறையில் நேர்த்தியாக செய்தனர். 

இந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில் — இது வெறும் பொருட்கள் வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல. சமுதாயத்தில் அடித்தளத்தில் உழைக்கும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட உண்மையான நலத் திட்டமாக இது அமைந்தது.

இத்தகைய நற்காரியத்தின் மூலம், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூக நலனுக்காக அர்ப்பணிப்பான நாளாக மாறியது பெருமகிழ்ச்சி தருகிறது. அவருடைய தலைமைத்துவத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கம், உத்வேகம், நம்பிக்கை, வழிகாட்டுதல் ஆகியவை இத்தகைய நிகழ்வுகளின் மூலம் கண்கூடாக வெளிப்படுகின்றன.

இந்த நலத்திட்ட நிகழ்வு கட்சியின் ஒற்றுமையையும், சமூகப் பொறுப்புணர்வையும், இளைஞர் பட்டாளத்தின் பங்கீட்டையும், மனித நேயத்தையும் வலியுறுத்தும் முக்கியத்துவமான முயற்சியாக அமைந்தது. அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமித்த செயல்பாட்டின் மூலம் இந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவில், இந்த நாள் வெறும் பிறந்தநாள் விழாவாக இல்லாது, “சகமனிதனை மதிப்போம் – சமூகத்தை உயர்த்துவோம்” என்ற விடியலுக்கான ஒரு சமூக சேவை நாளாக பதிவாகியது. இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் மனதிலும் எழுந்த எண்ணமாகும். 

செல்லும் இடமெல்லாம் 

விதைப்போம் விதையை!

நம் வரலாறு பேசும் 

நமது கதையை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top